Saturday, April 20, 2024
Home » சப்ரகமுவ மாகாண தைப்பொங்கல் விழா

சப்ரகமுவ மாகாண தைப்பொங்கல் விழா

by Gayan Abeykoon
January 24, 2024 6:25 am 0 comment

சப்ரகமுவ மாகாண தைப்பொங்கல் விழா சப்ரகமுவ மாகாண ஆளுநர் சிரேஷ்ட சட்டத்தரணி நவீன் திசாநாயக்க தலைமையில் அண்மையில் தெரணியாகலை ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி எஸ். அதிரா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோர் இந்திய இலங்கைக்கான உறவை குறிக்கும் வகையில் தெரணியாகலை பிரதேச மலையக மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில அகராதி மற்றும் நூல்களும் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் தெரணியாகலை ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ இராதா சிவகுமார் குருக்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(காவத்தை தினகரன் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT