உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஆறு மனுக்களும் நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்துக்கு எதிராக இரு மனுக்கள் என்பன உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகரின் அறிவித்தல்கள் வேளையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 121 (1) சரத்துக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆறு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரதிகளும் கிடைத்துள்ளன.இதேபோன்று நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்துக்கு எதிராக அரசியலமைப்பின் 121 (1) சரத்துக்கமைய உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பிரதிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)