அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கை கடந்த சில வாரங்களாக பெய்த கன மழை காரணமாக அழிவுற்றுள்ளதுடன், இக்காணிகளின் உட்கட்டமைப்பும் எதிர்காலத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்திலுள்ள 29 கமநல சேவை பிரிவுகளில் 27 பிரிவுகளில் சுமார் 79 ஆயிரம் ஹெக்டேயரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் 50 சதவீதமானவை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும், நெற்செய்கை காணிகளில் வெள்ளநீர் ஊடறுத்து சென்றதால் மணல்மேடு, சேறு, நீரோடை உருவாகி நெற்செய்கைக்கு பொருத்தமற்றதாக காணிகள் மாறியுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் எதிர்வரும் சிறுபோக நெற்செய்கை பெரிதும் பாதிக்கப்படலாமெனவும், விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.
இறக்காமம் தினகரன் நிருபர்