பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் விவாதத்தை எடுப்பதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ள எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அது தொடர்பில் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய நிகழ்நிலை காப்புச் பாதுகாப்பு சட்டமூலத்தை விவாதிப்பது எனும் தீர்மானம் 33 மேலதிக வாக்குகளால் ஏற்றுக்கொள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் தற்போது விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (23) பாராளுமன்றம் கூடிய போது, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தப்பட்டு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
இதன் பிரகாரம் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், குறித்த சட்ட மூலத்தை தற்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் பின்னர் சபாநாயகர் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தை எடுக்க சம்மதமா என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடம் கேள்வியெழுப்பிய நிலையில் அடுத்து, குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ள எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அது தொடர்பில் தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்: பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு