Saturday, April 20, 2024
Home » பதுளை அல் -ஹிக்மா மாணவர்களுக்கு பாராட்டு விழா!

பதுளை அல் -ஹிக்மா மாணவர்களுக்கு பாராட்டு விழா!

by Gayan Abeykoon
January 24, 2024 1:00 am 0 comment

 பதுளை அல்- ஹிக்மா ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜே. எம் ரிஸ்வான் தலைமையில் ப/வை. எம். எம். ஏ கிளை மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இதன்போது 2023 ஆம் ஆண்டு சித்தியடைந்த 11 மாணவர்களும் பாடசாலை வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் சித்தியடைந்த (2022) 15 மாணவர்களும் பதக்கங்கள் அணிவித்து பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். கற்பித்த ஆர்.சம்சுந் நிஸா, ஜே.நிரோஷினி ஆசிரியைகளும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க, மற்றும் கல்வியாளர்கள், உலமாக்கள்,பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT