Saturday, April 20, 2024
Home » அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது

- இன்று அதிகாலை சம்பவம்; 2 படகுகள் மீட்பு

by Rizwan Segu Mohideen
January 23, 2024 10:46 am 0 comment

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT