Friday, March 29, 2024
Home » நயினை அம்மனுக்கு தங்க குடம்

நயினை அம்மனுக்கு தங்க குடம்

by Prashahini
January 21, 2024 7:56 pm 0 comment

நயினாதீவு நாக பூசனை அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த தங்க திருக்குட பவனி நேற்று (20) காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதிஷ்டா கிரியைகள் கடந்த தினம் புதன்கிழமை ஆரம்பமாகி கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.

நாளை (22) காலை 7.00 மணி முதல் , நாளை மறுதினம் (23) மாலை 5.00 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.

அதனை தொடர்ந்து புதன்கிழமை (24) காலை 9.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT