இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடல் சிகிச்சை நிபுணர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரபல களத்தடுப்பாளரான ஜொன்டி ரோட்ஸ் உட்பட சர்வதேச பிரபலம் பெற்ற மூவரின் சேவையை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் உடல் சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் குன்டுரி ஆகியோரின் சேவையை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
இந்த மூவரும் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்கள், பயிற்றுனர்கள் மற்றும் உடல் சிகிச்சை நிபுணர்களுக்கு விசேட பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடாகி இருப்பதோடு அவர்களின் பங்கேற்புடன் பல்வேறு பகுதிகளில் விசேட பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டில் தனக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த செய்தியை தான் மறுப்பதாகவும் தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ், தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.