வெலிகம முஹியித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் புதிய தெரு வாலிபர் சங்கம் ஆகியன இணைந்து (15) ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் வெலிகம முஹியித்தீன் பள்ளிவாசல் முற்ற வெளியில் இடம் பெற்றது.
இதில் 15க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர். இவர்கள் அனைவரும் வெலிகம மண்ணைச் சேர்ந்தவர்கள். சுமார் 1000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். காலை 9.00 மணி முதல் மாலை வரை இது இடம் பெற்றது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பாராட்டத்தக்கது என புத்திஜீவிகள் மற்றும் பலரும் குறிப்பிடுகின்றனர்.
(வெலிகம தினகரன் நிருபர்)