97
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கச்சக்கொட்டித்தீவு -மாகமாறு வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று (18) வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.
இவ்வீதியில் பயணம் செய்யும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையிட்டு மக்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
(ஏ.எம்.ஆஷிப்)