Friday, March 29, 2024
Home » ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’

‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’

by sachintha
January 19, 2024 12:50 pm 0 comment

ஏறாவூரில் இரத்ததான நிகழ்வு


‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செய்யட் அஹமட் தலைமையில் ஏறாவூர் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் அவர்களும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் விசேட ஆணையாளர் ஹமீம், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் முகைதீன், ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் சாஜித் ஹுசைன், சமூக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன், கிராம சேபை உத்தியோகத்தர் சீராஸ், சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர்களான முபாறக், றிபாய்தீன், ஹனீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

வைத்தியர்கள் ,தாதி உத்தியோஸ்தர்கள், அதிகளவிலான குருதி கொடையாளிகள் இரத்ததான முகாமில் பங்கேற்றனர்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்…
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT