164
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி நினைவுச்சொற்பொழிவு இன்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “திராவிட கருத்தியல் திரள்வும் ஆறுமுகநாவலரும்” என்னும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலை வரலாறு, நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் பாக்கியநாதன் அகிலன் உரை நிகழ்த்தவுள்ளார்.