Thursday, April 18, 2024
Home » அஸ்வெசும மலையகத்தில் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்

அஸ்வெசும மலையகத்தில் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்

- இதுவரை 45 சதவீதம் மட்டுமே பூர்த்தி

by gayan
January 18, 2024 7:30 am 0 comment

மலையகத்தில் ‘அஸ்வெசும’ வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார்.

‘அஸ்வெசும’உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும்

உள்வாங்கபட்டும் இன்றளவும் பணம் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளவர்கள் பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார். நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல மலையகத்திலுள்ள அஸ்வெசும பெறுவதற்கு தகுதியானவர்கள், எவராக இருப்பினும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT