151
வற்வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய, ச.தொ.ச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியுமென, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
வற் வரி பதினெட்டு சதவீதமாக அதிகரிக்கப்பட்டமையால், சந்தையில் சில பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.