Thursday, March 28, 2024
Home » ஜா எல, குடாஹக்கபொலயில் ரயில் – கார் கோர விபத்து

ஜா எல, குடாஹக்கபொலயில் ரயில் – கார் கோர விபத்து

தாய், மகள் உட்பட 04 பேர் படுகாயம்

by gayan
January 18, 2024 6:10 am 0 comment

ஜா எல, குடா ஹக்கபொல பகுதியில் காரொன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாதில் காரில் பயணித்த தாய், மகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜா-எல பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கார் பலத்த சேதத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா–எல, குடஹாகபொல ரயில் நிலையத்துக்கருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காரில் ஒரு தம்பதியுடன் தாய் மற்றும் மகளும் பயணித்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களே, இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் நால்வரும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். கட்டுநாயக்கவுக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் ரயிலே,நேற்று காருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT