173
புத்தளம் நகரத்துக்கான, புதிய பிறப்பு,இறப்பு நிரந்தர பதிவாளராக புத்தளத்தைச் சேர்ந்த, பேர்னாட் மேரி இந்துமதி நியமனம் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் இரு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். சமாதான நீதவான் மற்றும் திருமணப் பதிவாளராகவும் இவர் கடமையாற்றி வருகின்றார். பதிவாளரை திங்கள் முதல் வெள்ளி வரை புத்தளம், தள வைத்தியசாலை அலுவலகத்திலும், சனி, ஞாயிறு தினங்களில், தனது இல்லத்திலுள்ள அலுவலகத்திலும் சந்திக்க முடியுமென அவர் தெரிவித்தார்.
(புத்தளம் தினகரன் நிருபர்)