Friday, April 26, 2024
Home » வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்க குசவன் குளம் புனரமைப்பு

வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்க குசவன் குளம் புனரமைப்பு

by Prashahini
January 15, 2024 12:44 pm 0 comment

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜாயா நகர் கிராமஉத்தியோகத்தர் பிரிவில் குசவன் குளம் புனரமைக்கப்பட்டுவருகின்றன.

இக்குளத்தித்தில் தேங்கியுள்ள சல்வீனியாகளைகள் அகற்றப்பட்டு குளம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இது மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக்கின் வேண்டுகோளின்பிரகாரம் முன்னெடுக்கப்படுகின்றன. இக்குளத்தில் சல்வீனீயாக்கள் வளர்ந்து குளத்தை மூடி அடைத்துள்ளதால் நீர் ஓட்டமின்மையால் இப்பகுதியிலுள்ள மக்கள் வெள்ள நீர் தேங்கி மழைகாலத்தில் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை கருத்திற்கு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பகுதியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இவவாறு புனரமைப்பதன் மூலம் இங்குள்ள 400 குடும்பங்கள் பயனடைவார்கள் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தெரிவித்தார்.

தோப்பூர் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT