Saturday, April 20, 2024
Home » தேடப்படும் 42,248 சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

தேடப்படும் 42,248 சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

by damith
January 15, 2024 7:30 am 0 comment

நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள சந்தேக நபர்கள் 42,248 பேரின் பெயர்ப் பட்டியல்கள், சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கையின் கீழ், மேற்படி சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேற்படி, சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும், இதுவரை கைது செய்யப்படாத நிலையிலுள்ள 4,258 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் 807 மற்றும் 1,678 சந்தேக நபர்கள் என 2,485 பேரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென ,பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். மேற்கண்ட மூன்று பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதற்கிண ங்க சகல குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT