Friday, March 29, 2024
Home » மலையக வாழ் மக்கள் வாழ்விலும் புதுப் பொலிவுடன் வழி பிறக்கட்டும்

மலையக வாழ் மக்கள் வாழ்விலும் புதுப் பொலிவுடன் வழி பிறக்கட்டும்

வடிவேல் சுரேஷ் வாழ்த்து செய்தி

by damith
January 15, 2024 9:35 am 0 comment

உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழாவே தைப்பொங்கல் திருநாள்.

பண்டைக்காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசருமான வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் என் தொப்புள் கொடி உறவுகளான மலையக மக்கள் வாழ்விலும் புதுப் பொலிவுடன் வழி பிறக்கட்டும் என்ற பிரார்த்தனையோடு தைத்திங்கள் முதல்நாள் தன்னி கரற்ற பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் நன்னாளுடன் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண்டாடி மகிழும் தமிழ் உறவுகளுக்கு நல்லிணக்கம் நிமிர்ந்திட எல்லா வளங்களும் பெருகிட என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT