தமிழர்களின் பாரம்பரிய தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் இந்து மக்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸவித்தாரன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்கள் வாழ்வில் ஒன்றிணைந்த திருநாட்களில் பொங்கல் விழா பிரதான இடத்தை வகிக்கிறது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்கு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பிறகு தை பிறந்தால் வழிபிறக்கும் என்று தமிழ் மக்கள் கூறுவார்கள் அதனால் இவ் வருடம் தமிழ் மக்கள் வாழ்வில் சுபீட்சம் மலர்ந்து நிம்மதியான வாழ்க்கை அமைய பிராத்திக்கிறேன்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார கஷ்டத்தை மக்கள் எதிர் நோக்குகின்றனர், பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீள வேண்டுமானால் எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்த மக்கள் அரசியல் பேதங்களை மறந்து கை கோர்த்து செயற்பட வேண்டும்.
அது மட்டும்மல்ல தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி அம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற லங்கா சமசமாஜகட்சி என்றும் ஆதரவு வழங்கும் என மேலும் தெரிவித்தார்.