இம்முறை கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சையை மீள நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க அந்த பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினம் காலை 8:30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை அந்த பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்ட கடந்த 10-ம் திகதி நடத்தப்பட்ட விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் கேள்விப் பத்திரத்திற்கான புதிய கேள்விப் பத்திரத்தை உள்ளடக்கியதாகவே இந்த விசேட பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இம்மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதியிலும் நடைபெறும் என்றும் அனைத்துப் பரீட்சை நிலையங்களும் அன்றைய தினத்திலும் வழமை போன்று நடைமுறையிலிருக்கும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்