Thursday, April 25, 2024
Home » நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞனின் உடல் மீட்பு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞனின் உடல் மீட்பு

by Prashahini
January 13, 2024 1:00 pm 0 comment

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனின் உடல் இன்று (13) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதான மாஹிர் அதீக் எனும் இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.

நேற்று கல்குடா சுழியோடிகள் கடும் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படாத நிலையில் இன்று இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மரண விசாரணைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT