196
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனின் உடல் இன்று (13) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் நீராடச் சென்ற வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதான மாஹிர் அதீக் எனும் இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
நேற்று கல்குடா சுழியோடிகள் கடும் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படாத நிலையில் இன்று இளைஞன் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மரண விசாரணைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்