கொழும்பு, பேலியகொடை வணிக வளாகம் மற்றும் கொம்பனித்தெரு பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
யாகின்ன, கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். பல்வேறு நபர்களிடம் 19,663,800 ரூபாவை இச்சந்தேக நபர் மோசடி செய்தமை தொடர்பாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து விசாரணை நடத்தி இச்சந்தேக நபரைக் கைது செய்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர். ஆகவே, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.