Saturday, April 20, 2024
Home » தமிழ்க் கைதிகளை உறவினர்கள் இனிப்புகளுடன் பார்வையிட அனுமதி

தமிழ்க் கைதிகளை உறவினர்கள் இனிப்புகளுடன் பார்வையிட அனுமதி

தைப்பொங்கல் தினத்தன்று

by gayan
January 13, 2024 4:40 pm 0 comment

தைப்பொங்கல் தினத்தன்று இந்துமத தமிழ்க் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கும் வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இந்துமத தமிழ்க் கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வரும் போது, ​​ஒருவருக்கு மட்டும் போதுமான உணவுப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை கொண்டு வருமாறு சிறைச்சாலை ஆணையாளர் (புலனாய்வு மற்றும்

நடவடிக்கை) சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் முறையான சுகாதார, பாதுகாப்பு முறைகளின் கீழ் கைதிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT