நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபத்தை மீண்டும் எதிர்வரும் காலப்பகுதியில் வெளியிடவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (11) அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் சுற்றுநிருபத்தை உடனடியாக வெளியிட எதிர்பார்த்துள்ளதாகத்
தெரிவித்த அவர், ஏற்கெனவே ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதாகவும் ஆயினும் அதனை கடைப்பிடிக்காமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையிலேயே புதிய சுற்றுநிருபத்தை வெளியிடவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.