Home » மத்திய வங்கி ஆளுநரின் கூற்று 03 நாள் விவாதத்துக்கு கோரிக்கை

மத்திய வங்கி ஆளுநரின் கூற்று 03 நாள் விவாதத்துக்கு கோரிக்கை

by sachintha
January 12, 2024 6:30 am 0 comment

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுடனான வேலைத் திட்டத்தை விட, வேறு எந்த வேலைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாதென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ள கூற்று தொடர்பில் மூன்று நாள் விவாதத்தைப் பெற்றுத் தருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே காணப்படுகிறதென்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை விட வேறு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதெ ன மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ள கூற்று, மிக முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வகையில் அது தொடர்பில் விரிவான விவாதத்தை முன்னெடுப்பது முக்கியமென குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைக்கப்பட்டுடன் இது தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படுமென, சபாநாயகர் இதன் போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்பி தெரிவித்த கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT