சீன மக்களைப் பழிவாங்கும் சைபர் மோசடி நடவடிக்கைகளை அகற்றவும், சீனா-மியன்மார் எல்லையில் வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துறைசார் நிபுணர்கள் நம்புகின்றனர்.
கடந்த டிசம்பர் 20ஆம் திகதி குன்மிங்கில் நடைபெற்ற இராணுவத்திற்கும் மூன்று சகோதரத்துவக் கூட்டணிக்கும் இடையிலான அமைதிப் பேச்சைக் கூட்டுவதில் சீனாவின் இலக்குகள் இரு மடங்கு ஆகுமென, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்டிம்சன் மையத்தின் சீனா திட்டத்தின் இயக்குனர் யுன் சன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகையில் ” இதனால் பொருளாதார நலன் அல்லது எல்லை வர்த்தகம் பாதிக்கப்படுவது நிச்சயம் என்றும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போர்நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை மேற்கொள்வதன் ஊடாக ஸ்தீர நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
மியன்மார் ஆட்சியாளர்களுக்கும் இனக்குழுக்களுக்கும் இடையிலான ஆயுத மோதலால் சீனாவிற்கும் மியன்மாருக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் நாளாந்தம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட மியன்மார் உள்நாட்டு அரசியல் ஆய்வாளர் தான் சோ நாயிங் தெரிவித்துள்ளார். இந்த இழப்பு சீனாவை விட மியன்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“சீனாவின் சர்வதேச பொருளாதார உறவுகளுடன் ஒப்பிடும்போது எல்லைப் பகுதியில் இருந்து பொருட்களை பரிமாற்றுவதில் ஓட்டம் காணப்படவில்லை இதனால். நம் நாடு மேலும் பாதிக்கப்படுகிறது. பீஜிங் தனது பொதுக் கொள்கையின்படி, பேச்சுவார்த்தைகள் தொடர்பான அறிக்கைகள் சமமாக இருக்குமாறு கவனித்துக்கொண்டது, அதன் பொதுக் கொள்கையின்படி, பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பின்பற்றுகிறது என்று வோஆ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 28 ஆம் திகதி சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “மியன்மாரில் தொடர்புடைய தரப்பினர் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள், தரையில் நிலைமையை சுறுசுறுப்பாக எளிதாக்குவார்கள், வடக்கு மியன்மாரில் சீன திட்டங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் மியன்மார் நடவடிக்கை எடுக்கும் என பீஜிங் நம்புகிறது.
மியன்மாரில் உள்ள இராணுவக் குழுவிற்கும் இனப் படைகளுக்கும் இடையிலான பிராந்தியக் கட்டுப்பாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சீனாவின் முக்கிய அக்கறையாக இருப்பதாக யுன் சன் கூறினார். இருப்பினும், சீனா-மியன்மார் எல்லையில் அமைந்துள்ள சைபர் மோசடிகளை முறியடிக்க சீனா விரும்புகிறது. இது சீனாவுக்கு சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் பிற்பகுதியில் ஒரு பெரிய தாக்குதலுக்குப் பிறகு இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் பாதுகாப்புப் படைகள் இயக்கம் வேகம் பெற்றுள்ளதோடு வடக்கில் கணிசமான அளவு பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக வோஆ செய்திச் சேவை குறிப்பிடுகிறது.
மியன்மார் ஆட்சிக்குழு இப்போது தற்காப்பு நிலையில் இருப்பதாகவும், போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் இரு ஆய்வாளர்களும் நம்புகின்றனர். இருப்பினும், கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலைத் தொடருவார்கள் என்றும், வடக்கு ஷான் மாநிலம் முழுவதும் மோதல் தீவிரமடையக்கூடும் என்றும் தான் சோ நாயிங் கூறினார்.
பல தசாப்தங்களாக இராணுவத்திற்கு எதிராகப் போராடிய பல்வேறு ஆயுதமேந்திய குழுக்களும், மக்கள் பாதுகாப்புப் படைகளும் ஒன்றிணைந்த படைகளைக் கொண்டுள்ளதோடு அவர்கள் கிராமப்புறங்களின் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது. இருப்பினும், இந்த குழுக்கள் தன்னாட்சி முறையில் இயங்கி மியன்மார் முழுவதும் பிரிந்து செயற்படுகின்றன. (ANI)