Friday, March 29, 2024
Home » சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐவருக்கு சைவத்தமிழ் விருது

சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐவருக்கு சைவத்தமிழ் விருது

by damith
January 8, 2024 5:55 am 0 comment

சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர் சிவலிங்கராசா, வைத்திய கலாநிதி அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன் மற்றும் இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகிய ஐந்து பெருந்தகைகள், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்தநாள் அறக்கொடை விழா நேற்று தெல்லிப்ழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவ மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி பாலகோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதுடன், உடுவில் கோட்ட கல்விப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT