Home » யாழ். ரயில் சேவைகள் நேற்று முதல் நிறுத்தம்

யாழ். ரயில் சேவைகள் நேற்று முதல் நிறுத்தம்

by damith
January 8, 2024 7:10 am 0 comment

வடக்கு ரயில் பாதையில் மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கு இடையிலான ரயில் பாதை நேற்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 06 மாதங்களுக்கு இப்பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று (07) முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே ரயில் சேவைகள் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்துக்கு மேலதிகமாக மட்டக்களப்பு ரயில் பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT