உத்தேச திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு, நாளை (09) ஆரம்பமாகி எதிர்வரும் 12 வரை இடம்பெறவுள்ளன.
இதற்கான தீர்மானத்தை கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு தீர்மானித்திருந்தது. அதற்கிணங்க நாளை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.
வாய் மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஸ்தாபிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் தேசிய நீரியல் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்களும் இடம் பெறவுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்