Thursday, April 25, 2024
Home » மிக மோசமான குற்றவாளிகள் 1130 பேர் இதுவரை இனங்காணல்

மிக மோசமான குற்றவாளிகள் 1130 பேர் இதுவரை இனங்காணல்

38 பேர் வெளிநாடுகளில் இயங்கியதாக அமைச்சர் டிரான் தெரிவிப்பு

by damith
January 8, 2024 6:20 am 0 comment

நாட்டில் மிக மோசமான குற்றவாளிகள் 1,092 பேர், இனங்காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளில் தங்கியிருந்து இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்களை செயற்படுத்தும் 38 குற்றவாளிகளும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் நாட்டில் மனிதப் படுகொலை உள்ளிட்ட மோசமான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அவ்வாறான 42 பேர், குற்றச் செயல்களை புரிந்து சில மணித்தியாலங்களில் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அதே வேளை, அவ்வாறானவர்களை இனங் கண்டு கைது செய்யும் வகையில், அந் நாடுகளின் பொலிசாரின் ஒத்துழைப்புடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT