Friday, March 29, 2024
Home » யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி பாராட்டு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கி பாராட்டு

by damith
January 8, 2024 9:40 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது யாழ். விஜயத்தின்போது க. பொ. த சாதாரண தரத்தில் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடமும் தமிழ்மொழி மாணவர்களுள் முதலிடமும் பெற்ற யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த அக்ஷ்யா அனந்த சயனன் என்ற மாணவியை சந்தித்து பாராட்டி நினைவுப் பரிசையும் வழங்கினார். அத்துடன் இந்து மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியையும் பாராட்டி நினைவுப் பரிசையும் வழங்கினார். யாழ். நல்லூர் ரியோ ஐஸ்கிறீம் நிறுவனத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொதுமக்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT