Thursday, March 28, 2024
Home » கிளிநொச்சி கண் சத்திரசிகிச்சை நிபுணர் பாராட்டி கௌரவிப்பு

கிளிநொச்சி கண் சத்திரசிகிச்சை நிபுணர் பாராட்டி கௌரவிப்பு

by damith
January 8, 2024 5:55 am 0 comment

கிளிநொச்சி மாவட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மு. ஞானரூபன் மற்றும் அவரது குழுவினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கண் சத்திர சிகிச்சை நிபுணரும் அவரது குழுவினரும் சிறப்பான முறையில் பணியாற்றி ஏராளமானவர்களின் பார்வை குறைகளை நீக்கியதோடு, ஏராளமான கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனவே இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை பாராட்டி மதிப்பளிக்கும் நோக்கில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் இவ் ஏற்பாட்டினை மேற்கொண்டனர்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர் க. முருகவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

(கிளிநொச்சி குறூப் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT