Friday, March 29, 2024
Home » மக்கள் வங்கியின் Husma Bedana Like Ekak திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் திட்டம்

மக்கள் வங்கியின் Husma Bedana Like Ekak திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் திட்டம்

by sachintha
January 5, 2024 1:18 pm 0 comment

மக்கள் வங்கியின் ‘மஹாஜன மெஹெவர’ சமூக நலன்புரித் திட்டத்தின் அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட Husma Bedana Like Ekak முயற்சியின் கீழ், மரக்கன்றுகளை நடும் திட்டம் அனுராதபுரம் கே.பி. ரத்நாயக்க கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அசித தனவிலவிதான, அனுராதபுரம் கே.பி. ரத்நாயக்க கல்லூரியின் அதிபர் திருமதி. தீபிகா குமாரசிங்க மற்றும் வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், கலன மித்துரு சங்கத்தின் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பொறுப்புள்ள நிதி நிறுவனம் என்ற வகையில், வங்கிச்சேவை மற்றும் நிலைபேண்தகைமையை இணைத்து, இத்திட்டத்தின் கீழ் மக்கள் வங்கியின் முகநூல் பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு 100 Like களுக்கு தலா ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் பூமியின் நலனுக்காக நன்கொடையாக வழங்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT