Tuesday, April 16, 2024
Home » நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ். விஜயம்

நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி யாழ். விஜயம்

அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் இன்று பங்கேற்பு

by gayan
January 4, 2024 6:55 am 0 comment

லோரன்ஸ் செல்வநாயகம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வடக்கிற்கு பயணமாகவுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்ள வுள்ளதுடன் அந்த மாவட்டங்களின் கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும்

மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை, இன்றைய தினம் வடக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர் விநியோகத் திட்டத்தையும் அவர்,ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளன.

பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடங்களின் விரிவுரையாளர்களுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மீனவர் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT