யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளாகிய இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ். நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா
அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்குள்ளாகி கடந்த நவம்பர் 19இல், உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. மன்றுக்கு கிடைத்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கையில்,சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் இளைஞனின் உடலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
அத்துடன் வழக்கு விசாரணைகளில் 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளைஞனின் உயிரிழப்பு, மனித ஆட்கொலை என மரண விசாரணை கட்டளையின் போது நீதவான் குறிப்பிட்டார். மேலும் இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்தார்.இது வரையில் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்து. ைகதாகி,விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் (16) வரை நீதவான் நீடித்துள்ளார்.
யாழ். விசேட நிருபர்