Friday, March 29, 2024
Home » கிழக்கு, ஊவா: 2 நாட்களுக்குள் மழை தற்காலிகமாக குறையும் வாய்ப்பு

கிழக்கு, ஊவா: 2 நாட்களுக்குள் மழை தற்காலிகமாக குறையும் வாய்ப்பு

- கிழக்கு, மாத்தளையில் சிறிதளவு மழை

by Rizwan Segu Mohideen
January 3, 2024 7:49 am 0 comment

– பல இடங்களில் மாலை வேளையில் மழை
– சில பகுதிகளில் 50 மி.மீ. அளவான மழை

இன்று (03) முதல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழை நிலைமை தற்காலிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென், மேல், ஊவா மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT