159
நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயம் நிறுவப்படவுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தை நிறுவுவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.