பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) ஏற்பாட்டிலான மீலாத் விழா மற்றும் போட்டி நிகழ்வு பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் எஸ்.ஆர் குமார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்வி அதிகாரிகள் , உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதன்போது இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.