Wednesday, April 24, 2024
Home » தகுதியுடையோர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு
ஹொரவபொத்தானை பிரதேச செயலக பிரிவில்

தகுதியுடையோர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைப்பு

by mahesh
January 3, 2024 11:10 am 0 comment

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 300 காணி அனுமதிப்பத்திரங்கள் தகுதியுடையவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த (29) ஹொரவபொத்தானை பிரதேச செயலாளர் திருமதி எம்.கே.ஜி. மொரவக தலைமையில் நடைபெற்றது.

ஹொரவபொத்தானை பிரதேச செயலகப் பிரிவின் 147 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரத்மலை மற்றும் 132 ஆம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் விலேவெவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசித்தவர்களுக்கே இந்த காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் போது உதவி பிரதேச செயலாளர் ஜெயசிங்க பண்டார, காணி உத்தியோகத்தர் மற்றும் காணி பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரிவு கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT