Friday, March 29, 2024
Home » தல்கஸ்பிடியவில் மாணவர்கள் கௌரவிப்பு

தல்கஸ்பிடியவில் மாணவர்கள் கௌரவிப்பு

by mahesh
January 3, 2024 10:20 am 0 comment

தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை வழிநடாத்திய அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் அத்தோடு, நோபல் உலக சாதனை பெற்று கிராமத்துக்கே பெருமை தேடிக் கொடுத்த எழுத்தாளரும் கவிதாயினியும் ஆசிரியையுமான திருமதி நதீரா வசூக் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரபல வர்த்தகரும் அகில இலங்கை மனித உரிமைகள் சாசன அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. மௌசூம் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் ஸ்தாபகப் பொருளாளர் ஜே.எம்.அன்வர்தீன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் மஹ்பூப் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் என விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT