சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.பிரபாகர் தனது 36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்கின்றார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையிலும் கற்று, 1988ஆம் ஆண்டு ஆசிரியராக நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார்.
அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் 2009.11.13ஆம் திகதி அதிபராக சவளக்கடை விநாயகர் வித்தியாலயத்திலும் பின்னர் 2010.06.02 தொடக்கம் 2020.1.05வரை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்திலும் 2020.01.06 தொடக்கம் கலைமகள் மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றிய நிலையில் இவர் ஓய்வுபெறுகின்றார்.
மணல்சேனை நிருபர்