Thursday, April 25, 2024
Home » வைத்தியசாலை முன்பாக வாள்வெட்டு; 21 வயது இளைஞன் படுகாயம்

வைத்தியசாலை முன்பாக வாள்வெட்டு; 21 வயது இளைஞன் படுகாயம்

- உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் புகுந்தவர்களால் சம்பவம்

by Prashahini
January 1, 2024 12:49 pm 0 comment

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்று (31) வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.

துன்னாலை வடக்கை சேர்ந்த 21 வயதுடைய யோகராசா திலக்சன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உணவகத்தில் இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் புகுந்தவர்கள் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT