பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து கொண்டார்.
இன்று (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த அவர், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க தமது கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக, அக்கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்பதோடு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக ஷான் விஜயலால் டி சில்வாவு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நியமிக்கப்பட்டார்.