மலையக கல்வித்துறை, அரசியல் எழுச்சி மற்றும் தமிழ் இலக்கியத்துறைக்கும் பெரும் பங்காற்றிய அமரர் வி.டி. செல்வராஜின் மறைவு மலையக சமுகத்திற்கு பேரிழப்பாகும்.
பாத தேசிய கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியான அன்னார் மலையக மக்கள் முன்னனி ஸ்தாபகர்களில் ஒருவரும் சிரேஸ்ட உப தலைவர்ருமாகிய அமரர் வி.டி. தர்மலிங்கத்தின் சகோதரரும் ஆவார். அமரர் செல்வராஜ் ம.ம.முன்னனி அமைப்பை ஸ்தாபிப்பதில் பெரும் பங்காற்றியவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்பதோடு, அவரின் பிரிவுத் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு மலையக மக்கள் முன்னணி சார்பில் மது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
செல்வராஜ் நேற்று (31) காலமானதை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் இந்த அனுதாபச் செய்தியை விடுத்துள்ளார்.