புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், 09 ஒன்பது பேர் காயமடைந்தனர்.
புத்தளம் பகுதியிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப்பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி, இவ்விபத்து இடம்பெற்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்தனர்.இவர்கள், முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் எட்டுப் பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவ்விபத்தில், இரண்டு சொகுசு கார்களும் சேதமடைந்தன.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.