Friday, April 19, 2024
Home » சொகுசுக் கார்கள் மோதி விபத்து: ஒன்பது பேர் காயம்

சொகுசுக் கார்கள் மோதி விபத்து: ஒன்பது பேர் காயம்

by damith
January 1, 2024 7:00 am 0 comment

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், 09 ஒன்பது பேர் காயமடைந்தனர்.

புத்தளம் பகுதியிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப்பயணித்த காரும் நேருக்கு நேர் மோதி, இவ்விபத்து இடம்பெற்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்தனர்.இவர்கள், முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் எட்டுப் பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவ்விபத்தில், இரண்டு சொகுசு கார்களும் சேதமடைந்தன.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT