பிறந்துள்ள புத்தாண்டில், புதிய எதிர்பார்ப்புக் களை வெல்லக்கூடிய செயற்பாடுகளில் முனைப்புடன் செயற்பட வாழ்த்துவதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், இவ்வருட பட்ஜட்டில் உள்ளக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசாரம் துறைகளில் புதியதோர் யுகத்தை உருவாக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அராசாங்கத்தின் வேலைத்திட்டங்களால் இச்சவால்களை வெல்ல முடியும்.இதற்காக அர்ப்பணிப்புடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் எமது விவசாயிகள் ஆற்றிய சவாலான பணியை இப்புத்தாண்டில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
புத்தாக்கங்கள் மற்றும் தொழில் முயற்சி சார்ந்த மனப்பான்மையுடன் புதுமையான எண்ணக்கருக்கள் மூலம் புதிய தலைமுறையை வலுவூட்டி, நாட்டை உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி முன்கொண்டு செல்வதற்கு உறுதிபூணுவோம்.
கடந்த காலம் எமக்கு பல விடயங்களை சிந்திக்க வைத்துள்ளது. தொற்று நோய்நிலைமைகள், அனர்த்தங்கள், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் போன்றவை அண்மைக்கால வரலாற்றில் நாம் கண்டிராதவையாகும். மீண்டும் அவ்வாறான நெருக்கடி நிலைமைகளுக்கு முகம்கொடுக்காதிருக்க, அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாமலிருக்க, மலரும் இந்த புத்தாண்டை புதிய சிந்தனைகளுடன் வரவேற்போம்.
சவால்களுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் ஆரம்பமாகும் 2024