Home » மாத்தளை பகுதியில் கடுங்காற்று; ஏழு வீடுகள் சேதம்

மாத்தளை பகுதியில் கடுங்காற்று; ஏழு வீடுகள் சேதம்

by damith
January 1, 2024 5:53 am 0 comment

மாத்தளை எல்கடுவ பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய பலத்த காற்றினால் ஹுனுகல தோட்டத்தில் லயன் குடியிருப்புக்களில் ஏழு வீடுகளின் கூரைகள் உடைந்து வீழ்ந்துள்ளன. இதனால் 05 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களுள் 02 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் குடியிருப்புக்களின் கூரைகள் உடைந்தும் குடியிருப்பு அறை ஒன்றின் சுவர் ஒன்றும் வீழ்ந்துள்ளது. இதனால் 05 பேர் காயத்துக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 07 குடியிருப்புகளில் வசித்து வந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

(மாத்தளை சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT