165
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது நேற்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்பட்டது.
இந்த காலப்பகுதியில் மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் மாதிரி வினாக்களை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது தடைசெய்யப்படுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெற உள்ளது.