Friday, March 29, 2024
Home » சட்டத்தரணிகள் கிண்ண கிரிக்கெட் போட்டி

சட்டத்தரணிகள் கிண்ண கிரிக்கெட் போட்டி

by sachintha
December 30, 2023 10:35 am 0 comment

சட்டத்தரணிகள் கிண்ண கிரிக்கெட் போட்டி நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் நேற்று முன்தினம் (28) ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இலங்கையில் இருந்து இரு அணிகள் பங்கேற்பதோடு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்தும் தலா இரண்டு அணிகள் பங்கேற்கின்றன.

தவிர இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஏனைய பொதுநலவாய நாடுகளை உள்ளடக்கிய பொதுநலவான அணி ஒன்று பங்கேற்றுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, இலங்கை முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT